2012-ல் தொடர்ந்திருந்த வழக்குக்குக் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இவ்வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார்.
அத்தீர்ப்பில், ‘’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது" எனக் கடுமைகாட்டியிருப்பதோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்.
‘‘இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும்’’ என்றும் சொல்லியிருக்கிறார் நீதிபதி.
No comments:
Post a Comment